Description:புலப்பெயர்வின் இன்னொரு பக்கம்கவிக்கோ அப்துல் ரகுமான்வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று குடும்பத்தைப் பிரிந்து வாழ்கிற வாழ்க்கை மிகக்கொடுமையானது. கவிஞர் இசாக் இந்த நூலில் எழுதியுள்ள கவிதைகளின் பல சூழலை நான் நேரில் கண்டு அது பற்றிப் பேசியும் உள்ளேன்.இலக்கிய அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்காகப் பலநாடுகளுக்கும் சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கைபற்றி அறிந்தவன் என்கிற வகையில் இந்த நூல் மிக முக்கியமானது. இந்த பேசப்படாதப் பிரச்சினையைப் பதிவு செய்ததற்காகவே இசாக்கைப் பாராட்டவேண்டும்.வளைகுடா நாடுகளில் அமீரகத்திற்குச் சென்றிருந்தபோது… சார்ஜாவில் ஒரு விடுதியில் தங்க வைத்திருந்தார்கள். அந்த விடுதியில் அறைத் தூய்மை செய்யும் இளைஞர், அறைக்கு வந்து வேலையை முடித்துவிட்டு, நீண்டநேரம் நின்றிருந்தார். நான் விசாரித்தேன். “அய்யா உங்களுடைய கவிதைகளையெல்லாம் படித்திருக்கிறேன். உங்களைத் தெரியும். சொன்ன வேலையில்லாமல் இப்படி என்னை அழைத்துவந்து விட்டுவிட்டார்கள்…. ஊருக்கும் போக முடியாது. கடன் வாங்கி வந்துள்ளேன்” என்று தன் சூழலைப் பேசியவரிடம், ஆறுதலாகப் பேசி அனுப்பினேன்.இப்படிப் பல இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன். சென்று அங்கிருந்து மீளமுடியாமல் தன் வயதைத் தொலைத்துத் திரும்பி வந்து சொந்த ஊரில் எப்படி வாழ்வதெனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் முதியவர்களையும் சந்தித்திருக்கிறேன். கானல் நீரைத்தேடி ஓடும் வாழ்வாக உழைக்கும் மக்களின் வாழ்க்கை வளைகுடா நாடுகளில் உள்ளதை இசாக்கின் இந்தக் கவிதை நூலைப் படிக்கிறபோது மீண்டும் என்னால் உணரமுடிகிறது.நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றுப்பிழைப்புக்கான புலப்பெயர்வில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. தனிமனித வாழ்வியலாகவும், சமூகப் பிரச்சினையாகவும் பண்பாட்டுச் சூழல் சார்ந்தும் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. அவை கொஞ்சம் நல்லதாகவும் நிறையத் தீயதாகவும் இருப்பதை உணரவேண்டிய காலம் இது.எப்படியாவது வெளிநாடு போய் பிழைத்துக்கொள்ளலாம் என்ற மனச்சூழலை மறு ஆய்வுக்குட்படுத்தி அவற்றை ஒழுங்கு படுத்தவேண்டிய நிலையில் கவிஞர் இசாக் எழுதியுள்ள இந்த நூல் வெளிவருவது வரவேற்கத்தக்கது.அனைவரும் இந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும். இது பேசுகிற பொருள்பற்றி விவாதிக்க வேண்டும். வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய இன்னொரு பக்கத்தைப் பதிவு செய்துள்ள கவிஞர் இசாக்கைப் பாராட்டி மகிழ்கிறேன்.(துணையிழந்தவளின் துயரம் நூல் வெளியீட்டு விழாவில் கவிக்கோ உரை)We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with மணல் உரையாடல் [Manal Uraiyaadal]. To get started finding மணல் உரையாடல் [Manal Uraiyaadal], you are right to find our website which has a comprehensive collection of manuals listed. Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.
Description: புலப்பெயர்வின் இன்னொரு பக்கம்கவிக்கோ அப்துல் ரகுமான்வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று குடும்பத்தைப் பிரிந்து வாழ்கிற வாழ்க்கை மிகக்கொடுமையானது. கவிஞர் இசாக் இந்த நூலில் எழுதியுள்ள கவிதைகளின் பல சூழலை நான் நேரில் கண்டு அது பற்றிப் பேசியும் உள்ளேன்.இலக்கிய அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்காகப் பலநாடுகளுக்கும் சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கைபற்றி அறிந்தவன் என்கிற வகையில் இந்த நூல் மிக முக்கியமானது. இந்த பேசப்படாதப் பிரச்சினையைப் பதிவு செய்ததற்காகவே இசாக்கைப் பாராட்டவேண்டும்.வளைகுடா நாடுகளில் அமீரகத்திற்குச் சென்றிருந்தபோது… சார்ஜாவில் ஒரு விடுதியில் தங்க வைத்திருந்தார்கள். அந்த விடுதியில் அறைத் தூய்மை செய்யும் இளைஞர், அறைக்கு வந்து வேலையை முடித்துவிட்டு, நீண்டநேரம் நின்றிருந்தார். நான் விசாரித்தேன். “அய்யா உங்களுடைய கவிதைகளையெல்லாம் படித்திருக்கிறேன். உங்களைத் தெரியும். சொன்ன வேலையில்லாமல் இப்படி என்னை அழைத்துவந்து விட்டுவிட்டார்கள்…. ஊருக்கும் போக முடியாது. கடன் வாங்கி வந்துள்ளேன்” என்று தன் சூழலைப் பேசியவரிடம், ஆறுதலாகப் பேசி அனுப்பினேன்.இப்படிப் பல இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன். சென்று அங்கிருந்து மீளமுடியாமல் தன் வயதைத் தொலைத்துத் திரும்பி வந்து சொந்த ஊரில் எப்படி வாழ்வதெனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் முதியவர்களையும் சந்தித்திருக்கிறேன். கானல் நீரைத்தேடி ஓடும் வாழ்வாக உழைக்கும் மக்களின் வாழ்க்கை வளைகுடா நாடுகளில் உள்ளதை இசாக்கின் இந்தக் கவிதை நூலைப் படிக்கிறபோது மீண்டும் என்னால் உணரமுடிகிறது.நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றுப்பிழைப்புக்கான புலப்பெயர்வில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. தனிமனித வாழ்வியலாகவும், சமூகப் பிரச்சினையாகவும் பண்பாட்டுச் சூழல் சார்ந்தும் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. அவை கொஞ்சம் நல்லதாகவும் நிறையத் தீயதாகவும் இருப்பதை உணரவேண்டிய காலம் இது.எப்படியாவது வெளிநாடு போய் பிழைத்துக்கொள்ளலாம் என்ற மனச்சூழலை மறு ஆய்வுக்குட்படுத்தி அவற்றை ஒழுங்கு படுத்தவேண்டிய நிலையில் கவிஞர் இசாக் எழுதியுள்ள இந்த நூல் வெளிவருவது வரவேற்கத்தக்கது.அனைவரும் இந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும். இது பேசுகிற பொருள்பற்றி விவாதிக்க வேண்டும். வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய இன்னொரு பக்கத்தைப் பதிவு செய்துள்ள கவிஞர் இசாக்கைப் பாராட்டி மகிழ்கிறேன்.(துணையிழந்தவளின் துயரம் நூல் வெளியீட்டு விழாவில் கவிக்கோ உரை)We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with மணல் உரையாடல் [Manal Uraiyaadal]. To get started finding மணல் உரையாடல் [Manal Uraiyaadal], you are right to find our website which has a comprehensive collection of manuals listed. Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.